ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் தமிழக உள்ளாட்சி நடுவர் மன்ற தலைவராக பொறுப்பு !

தமிழ்நாட்டில் உள்ளாட்சி பிரச்னைகளை தீர்க்கும் உள்ளாட்சி நடுவர் மன்ற தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் பெரோஸ்கான் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் ,இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் பெரோஸ்கான், தமிழ்நாடு உள்ளாட்சி நடுவர் மன்ற தலைவராக மூன்று ஆண்டுகள் பணிபுரிவார் என்பது குறிப்பிடத்தக்கது.