தமிழக முதல்வர் ஸ்டாலின் கோட்டையில் கொடி ஏற்றினார் !

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு முதல்முறையாக தேசியக் கொடியேற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார்.

பின்னர் பேசிய அவர், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் வாய்ப்பை பெற்றுத்தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என கூறினார்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.8,500ல் இருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் மதுரை காந்தி அருங்காட்சியகம் பொதுமக்களையும் இளைய தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில் 6 கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும்.