தமிழகத்தில் 72 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இடைவிடாமல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. மாலை 6 மணி வரை எல்லா வாக்காளர்களும் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு கொரோனா நோயாளிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், கொரோனா நோயாளிகள் மத்தியில் வாக்களிக்க ஆர்வம் இல்லை என்றாலும், ஒரு சில வாக்குச்சாவடிகளில் கடமை உணர்வில் கவச உடையுடன் வந்து வாக்களித்தையும் காண முடிந்தது.

தமிழகத்தில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீதமும், காலை 11 நிலவரப்படி 26.90 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீதமும், மாலை 3 மணி நிலவரப்படி 53.35 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதமும், இரவு 7 மணி நிலவரப்படி 71.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.