கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு !

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில் 2 வது மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மண் சரிவின் போது பாறை உருண்டு விழுந்ததில் 3 சாலைகள் சேதம் அடைந்துள்ளன. மண் சரிவு காரணமாக 2வது மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.மேலும் malபுதன்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இணைப்புச் சாலைப் புள்ளிக்கு அருகே திருமலை காட் சாலை மீண்டும் சீல் வைக்கப்பட்டது.இந்த சம்பவத்தால் வாகன போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொறியியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், காட் சாலையில் நிலச்சரிவு இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.