கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இதன் காரணமாக இந்திய முழுவதும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.தற்போது புதிய வகை omicron variant பரவும் செய்தியால் மக்கள் மீண்டும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா தொற்று வந்த பிறகு மக்கள் அன்றாட பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை பெரும் அளவில் உயர்ந்தது.இதில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்தது.
சென்னையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. மாதம் மாதம் விலை அதிகரித்து, அக்டோபர் மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை ரூ. 915.50 ஆக நீடித்தது
தற்போது வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து ரூ.2,234.50- க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.