மக்கள் கவனத்திற்கு..பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் !

தமிழகத்தில் பண்டிகை காலங்கள் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன.மேலும் நவம்பர் 4 ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது.தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

மேலும் தீபாவளி என்றால் நினைவுக்கு வருவது பட்டாசு.சென்னையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.