தமிழகத்தில் நவம்பர் ஒன்று முதல் திறக்கப்படும் பள்ளிகள் !

School Holiday : மாணவர்களுக்கு ஜன.15 வரை பள்ளிகள் விடுமுறை
மாணவர்களுக்கு ஜன.15 வரை பள்ளிகள் விடுமுறை

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

கர்நாடகா,பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.மேலும் தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது நவம்பர் 1 ம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை கூறுவது,காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் அன்று விடுமுறை விட வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது