தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு !

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

மேலும் இந்த மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் செப்.,15ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது கொரோனா பரவல் இருந்து வருவதால் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற நேரம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.