தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க முடிவு?

தமிழகத்தில் திரையரங்குகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்த முடிவெடுக்க வரும் 28 ஆம் தேதி சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

இது தொடர்பாக நேற்றைய தினம் திரையரங்க உரிமையாளர்கள், முதல்வர் பழனிசாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்தார்கள். அப்போது அவருடைய தாயார் மறைவு குறித்து துக்கம் விசாரித்துவிட்டு, திரையரங்குகள் திறப்பதற்குக் கோரிக்கை விடுத்தனர்.