குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம்..!

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

கொரோனா பாதித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய், இழப்பீடு வழங்கும் உத்தரவை செயல்படுத்துவதற்கு தமிழக அரசின் அரசாணை வெளியிட்டு இருக்கிறது.

மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசு இதுபோன்ற இழப்பீட்டு தொகையை வழங்காமல் இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நிவாரணத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நீதிபதிகள் அப்போது உத்தரவிட்டிருந்தனர்.

இதையும் படிங்க: ATM WITHDRAWAL: ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு..!