பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் தல அஜித்

வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் தேசியக் கொடியை ஏந்தியபடி நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாக பரவியது.

இந்தநிலையில் அஜித் மேற்கொள்ளும் உலக பயணத்தின் மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டு சென்று திரும்பும் வழியில் உள்ள தார் பாலைவனத்தில் தல அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

பைக்கில் சாய்ந்தவாறு தண்ணீர் அருந்தும் தல அஜித்தின் புகைப்படங்களை அவரது ரசிகர்ள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் கொரோனா மரணங்கள் திடீரென அதிகரிப்பு