இந்தியாவில் கொரோனா மரணங்கள் திடீரென அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா மரணங்கள் திடீரென அதிகரிப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,906 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,75,468 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 561 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,54,269 ஆக உயர்ந்தது.

இதனிடையே கொரோனா மரணங்கள் திடீரென அதிகரிப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 200 முதல் 300 வரை பதிவாகி வந்த மரணங்கள் தற்போது 500க்கு மேல் சென்றுள்ளது. நேற்று 660 ஆக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மக்களுக்கு தொல்லை தருவதில் மோடி அரசு புதிய சாதனை- பிரியங்கா காந்தி