கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு

இன்று ஆடிப்பெருக்கு விழா நடைபெறும் நிலையில் கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள், புதுமண தம்பதிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக இன்று நடைபெற இருக்கும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, வடக்கு வாசல் (கொள்ளிடம் ஆறு), தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை மற்றும் ஓடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவிரி ஆற்றின் கரைகளில் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றின் கரைகளில் வழிபாடு செய்வதற்கு வர வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.