சிரஞ்சீவி ஆக்ஸிஜன் வங்கி பற்றி தெரியுமா?

தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தனது சொந்த செலவில் சிரஞ்சீவி ஆக்ஸிஜன் வங்கி என்ற ஒன்றை ஆரம்பித்து மக்களுக்கு உதவி வருகிறார்.

இதன் முதல்கட்டமாக 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அனந்தப்பூர், குண்டூர் ஆகிய மாவட்டங்களுக்கு அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அடுத்த கம்மம், கரீம்நகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்க உள்ளார்.

சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் தேவைப்படுபவர்கள் இனிமேல் கவலை கொள்ள வேண்டாம் என்றும் மக்களுக்கு தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி. அவரின் இந்த பொது சேவையை திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் மனம் திறந்து பாராட்டியுள்ளனர். இதே போல் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்களும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.