இருமல் கட்டுக்குள் வர வீட்டு வைத்தியம்..!

கொரோனா இரண்டாம் அலையால் இருமல் என்றாலே எல்லோரும் கொரோனா அச்சம் கொண்டுள்ளார்கள். இருமல் பிரச்சனைக்கு எளிய வீட்டு வைத்தியம் உண்டு.

சிலருக்கு இருமல் அடுக்குதொடர் போன்று தொடர்ந்து இருக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் இருமலை அதிகமாக எதிர்கொள்வார்கள். இவர்கள் பாதிப்பில்லாமல் இருமல் நீங்க துளசி கைப்பிடி அளவு எடுத்து சாறு எடுக்கவும். பிறகு இதில் பனங்கற்கண்டு சேர்த்துகாய்ச்சி குடிக்க வேண்டும்.

கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை, துளசி இவற்றின் இலைகள் தலா அரைகைப்பிடி எடுத்து சுத்தம் செய்து சாறு எடுக்கவும். பிறகு சித்தரத்தை, இஞ்சி துண்டு இரண்டையும் சிறுதுண்டு அளவு எடுத்து அதையும் இடித்து சாறு எடுக்கவும். இலைச்சாறு மற்றும் இஞ்சி சித்தரத்தை சாறு இரண்டையும் கலந்து 10 முதல் 20 சொட்டு வரை வயதுக்கேற்ப எடுத்து வைக்கவும்.

இதை வெண்ணெயில் குழைத்து காலை மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் கட்டுக்குள் வரும். கபம் சார்ந்த இருமலுக்கு நல்ல மருந்து இது. குழந்தைகளுக்கு உண்டாகும் கணைச்சூடு குணமாகும்