நண்பரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நடிகர்

தமிழ் தொலைக்காட்சி நடிகர் இந்திர குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சென்னையிலுள்ள தனது நண்பரின் வீட்டில் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிகிறது.

தகவல்களின்படி, இந்திர குமார் தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார், அங்கு முந்தைய நாள் இரவு நண்பர்களுடன் இணைந்து ஒரு திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார். பின்னர், அறைக்குள் சென்ற அவர் காலையில் வெளியே வரவில்லை.

அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காத நிலையில், நண்பர்கள் அறைக்குச் சென்றபோது, இந்திர குமார் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.