நடிகை கவிதா மகன் கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனா பெருந்தொற்றுக்கு மகனை பறிகொடுத்த நடிகை கவிதாவுக்கு சக நட்சத்திரங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

கவிதாவின் கணவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது திரையுலகினர் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது.

கவிதா மகன் சாய் ரூப், கணவர் தசரத ராஜ் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று சிகிச்சை பலனில்லாமல் சாய் ரூப் மரணமடைந்தார். கணவர் தசரத ராஜ் இப்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.