தமிழ் மொழிக்காக கண்ணீர் சிந்திய கவிஞர் தாமரை

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை கட்டடத்தில் தமிழ் மொழியின் சிறப்பை பறைசாற்றும் விதமாக “தமிழ் வாழ்க” எனும் பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ரிப்பன் மாளிகையில் “தமிழ் வாழ்க” பெயர் பலகையை நீக்கப்பட்டதாக தகவல்கள் பரவின.

ரிப்பன் மாளிகை பலகையில் அப்பெயர் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள், இல்லாத புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இதுதொடர்பான விமர்சனங்களும் எழுந்தது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளில் அந்த பெயர் பலகை ரிப்பன் மாளிகையில் நிறுவப்பட்டது. ‘தமிழ் வாழ்க’மீண்டும் ஏற்றப்பட்ட காட்சியைப் பார்த்து எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது என்று கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.