பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் விடுமுறை – தமிழக அரசு !

கரோனா தொற்று தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது.மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.அதன் பின்னர் 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.