தனி வேளாண்மை பட்ஜெட் போடப்பட இருப்பதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது..!

தமிழகத்தில் விவசாயிகளுக்கான தனி வேளாண்மை பட்ஜெட் போடப்பட இருப்பதை தமிழக காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி,” தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் பா.ஜ.க-வுடன் நெருக்கம் காட்டுவதை மாநில காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் விரும்பவில்லை. வாசனை தனிப்பட்ட முறையில் குறை சொல்லி பேசவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் 100 நாட்களில் நிறைய சாதனைகளை செய்து உள்ளார். மேகதூது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேகதாது அணை கட்டினால் டெல்டா பகுதி சீரழியும்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்டா பகுதியில் உண்ணாவிரதம் இருந்தார். அவர் உண்மையிலேயே உண்ணாவிரதம் இருக்க வேண்டுமென்றால் டெல்லியில் பிரதமர் மோடி வீடு முன்பும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் வீடு முன்புதான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு டெல்டா பகுதியில் அண்ணாமலை உண்ணாவிரதமிருந்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்.