புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியி துணைநிலை ஆளுநராக இன்று பதவியேற்றார்.

குடியரசு தலைவரின் அறிவிப்பை தலைமை செயலர் படித்தார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் தமிழில் உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அதனைத் தொடரந்து, ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார். இந்த பதவி ஏற்பு விழா காலை 9.05 மணிக்கு துவங்கி 9.12 க்கு முடிவடைந்தது. பின்னர் காவல்துறையின் மரியாதையை ஏற்றார்.