சசிகலா விடுதலை கட்சியில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது- அமைச்சர் ஜெயகுமார்

சசிகலா சிறையில் இருந்து வெளிவர இன்னும் சில தினங்களே உள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில் சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.

மேலும் சசிகலா வெளியே வருவதால், தமிழகத்தில், எந்தவித தாக்கமும் ஏற்படாது. அவரும், அவரை சார்ந்தவர்களும் இல்லாத நிலை என்பதே, எங்கள் நிலைப்பாடு. சசிகலாவை சார்ந்தவர்கள் தலையீடு இல்லாமல், கட்சியும், ஆட்சியும் நடத்தப்பட வேண்டும் என்பதே, தொண்டர்கள் விருப்பம். அதன் அடிப்படையில் எடுத்த நிலையில், உறுதியாக உள்ளோம்.

சசிகலா குடும்பத்திடம் ஏராளமாக பணம் உள்ளது. அதை வைத்து, செயற்கையாக மாயை ஏற்படுத்தலாம். அதனால், எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளார்.