தமிழ்நாடு இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது – முதலமைச்சர்

குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தற்போது மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 500 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் திட்டங்கள் செயல்படுத்துவதில் நாட்டிற்கே எடுத்துக்காட்டாகத் தமிழ்நாடு திகழ்கிறது. நகர்ப்புறங்கள் மட்டுமன்றி, கிராமப் பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களும் தங்குதடையற்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறுவதற்கு மாநில அரசு திட்டங்கள் வகுத்து செயல்படுகிறது. இதன் காரணமாக, தேசிய அளவில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பல்வேறு விருதுகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது.