ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பு..!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, தமிழக பதிவுத்துறை மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் பொருட்களை வழங்க உத்தரவிடுவது குறித்து ஆலோசனை நடக்கிறது.

இது போன்று பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை உயரும். இதுகு றித்து சோதனை நடத்தும் போது முதல்முறை சிக்கினால் எச்சரிக்கப்படுவர். மீண்டும் தடுப்பூசி போடாதது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க: Corona cases in TN: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு