தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..மாநகராட்சி ஆனது தாம்பரம் !

தாம்பரம் நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.தமிழகத்தில் 6 உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படுகின்றன.

புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் குறித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியது,2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021-ம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதெனக் கருதப்படுகிறது.

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி ஆக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.