சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு

குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. நடிகை மற்றும் பா.ஜ.கவின் வேட்பாளரான குஷ்புவின் கணவரான இவர், குஷ்புவுக்காக ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.

இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், ‘என்னுடைய கணவர் சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், நன்றாக இருக்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

அவர், விரைவில் குணமடைய பிரார்தனை செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.