MK Stalin: முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவர்கள் உருக்கமான கோரிக்கை

cm-mk-stalin-visit-dubai-for-expo-2020
சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்

MK Stalin: உக்ரைனில் இருந்து பலத்த சிரமங்களுக்கிடையே தமிழகம் திரும்பிய மாணவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போர் பிரச்சனையில், மருத்துவ படிப்பிற்காக தமிழகத்தில் இருந்து உக்ரைன் சென்ற மாணவ மாணவியர்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.

போதிய உணவு, கழிப்பிட வசதியின்றி, குடிப்பதற்கும் தண்ணீர் கிடைகாமல் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதையில் ஒளிந்திருந்து, கடுங்குளிரில் பல கிலோ மீட்டர்கள் நடந்து என பல சிரமங்களைக் கடந்து தமிழகத்திற்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து தமிழகத்திற்கு திரும்பியுள்ள மாணவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவம் படிக்கும் கனவுகளுடன் இங்கே இடம் கிடைக்காமல் நாங்கள் உக்ரைனுக்கு படிக்க சென்றோம். எங்களை பத்திரமாக மீட்டது போல, எங்கள் மருத்துவ படிப்பும் தடைபடாமல், தமிழகத்திலேயே மேலும் மருத்துவ படிப்பைத் தொடர் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் இருந்து தமிழகத்திற்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கோரிக்கையை முதல்வர் ஏற்பாரா என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க: Job Fair: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்