இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி , முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
காலை 8 ;15 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மதுசூதனன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்தார். தொடர்ந்து பன்னீர்செல்வம், பழனிசாமி , ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தனர். அவரும் பதிலுக்கு கும்பிட்டார். பின்னர் 3 பேரும் அருகருகே அமர்ந்து இருந்தனர். சில நிமிடங்கள் கழித்து ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.



