ஹத்ராஸில் பெண் மரணம் குறித்து, சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை மட்டும், வெளியாகி விட்டால் உபி முதல்வர் யோகி, நிச்சயம் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார். இந்த எதிர்க்கட்சிகளின் செயல்பாடு எல்லாம் அரசியல் ஆதாயம் தானே தவிர நீதிக்காக அல்ல என்று அமைச்சர் ஸ்மிரிதி ராணி பேசிய பேச்சு இன்னும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது இந்தியா முழுவதும் ஹத்ராஸில் நடைபெற்ற பெண் மரணம் குறித்து பேசிக்கொண்டு இருக்கையில் பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி இப்படி பேசுவது சரியா என சமூக வலைத்தளங்களில் நெட்டிஸின்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதில் ஒருவர் நாடே பற்றி எரிகிறது தற்போது எதிர் கட்சியை பற்றி என் பேசவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.