ராசிபுரம் அருகேசிறுமிகளை 6 மாதமாக வன்கொடுமை செய்த 6 பேர் கைது..!

ராசிபுரம் அருகே 12 மற்றும் 13 வயதான சிறுமிகளை 6 மாதமாக வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் 2 சிறுமிகளை 75 வயது முதியவர் உட்பட 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 75 வயது முதியவர் உட்பட 7 பேரை ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும் சிறுமிகள் இருவரையும் 7 பேர் 6 மாதகாலமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here