மாணவிகளுக்கு பாலியல் அத்துமீறல் நடந்த சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை அவர் நேற்று அடையாளம் காட்டியிருந்த நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் ஆசிரமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
சுஷ்மிதா தான் சிவசங்கர் பாபாவிற்கு உதவியாளராக இருந்துள்ளார் என்றும் மாணவிகளை சிவசங்கரின் அறைக்கு மூளைசலவை செய்து அழைத்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் நீரஜ் மற்றும் கருணா என்ற இரு ஆசிரியைகளிடமும் விசாரணை தொடர்ந்து வருகின்றது. இதற்கிடையே கிளைசிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபாவிற்கு மாரடைப்பு வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது.
இதையடுத்து சிறையில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட சிவசங்கர்பாபாவிற்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.