திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் . இவர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்த முயற்சித்தார்.அவர்கள் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர். மேலும் அவர்கள் ஆடுகளை திருடும் கும்பல் என்று தெரிந்து கொண்டார் .அவர்களை உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களை தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிசென்றார்
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினர். படுகாயமடைந்த பூமிநாதன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது அவரது உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், ஆடு திருடிய கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.