காந்தி மாதிரியான ஆட்கள் தான் இன்றைய தேவை- கமல்ஹாசன்

தமிழ்நாடு வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் எனது தலைவர் காந்தி தான் என்று சொல்வதால் எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காந்தி மாதிரியான ஆட்கள் தான் இன்றைய தேவை, இனி இந்தியா இப்படி தான் இருக்கும் என்பவர்களால் மட்டும் தான் நல்ல அரசியல் செய்ய முடியும் என காந்தியை குறிப்பிட்டு கூறினார்.

தமிழ்நாட்டின் வரைபடத்தை கிழிக்க வேண்டும் என்ற திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.