இரவு 10 மணி வரை கடைகள் திறந்து இருக்கலாம் – முதலமைச்சர் பழனிசாமி

பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகளை இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதியளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது காய்கறி, உணவகம் உள்ளிட்ட கடைகளை இரவு 9 மணிவரை திறந்திருக்கலாம் என தமிழக அரசு சார்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகளை இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதியளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.