தொப்பூர் கொடூர சாலை விபத்து

தருமபுரி மாவட்டம், தொப்பூர் கனவாயில் அடுத்தடுத்த 15 வாகனங்கள் விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாயில் பகுதியில் சேலம் நோக்கி அதிக வேகமாக வந்த லாரி ஒன்று நிதானமாக சென்ற வாகனங்களின் மீது மோதி பாலத்தின் மீது நின்றது.

சாலை தாழ்வான பகுதி என்பதால் தொடா்ந்து வந்த 12 கார் இரண்டு மினி லாரி. ஒரு இருசக்கரவாகனம் உள்ளிட்ட 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்டன. இந்த வாகன விபத்தில் சம்பவ இடத்திடத்திலேயே 4 பேர் உயிழந்தனர்.

மேலு இதில் படுகாயமடைந்த 5 க்கும் மேற்பட்டர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து 15 வாகனங்கள் விபத்துக்குள்ளாதில் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்குக் காரணமான லாரி ஓட்டுநர் புட்புதின் என்பவரை வனப்பகுதியிலிருந்து தொப்பூர் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.