சின்னத்திரை நடிகர் அமரசிகாமணி காலமானார்

பிரபல சின்னத்திரை நடிகர் அமரசிகமணி மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்தார்.

கலைமாமணி விருது வென்ற நடிகரான அவர் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சிகாமணி மறைவை அவரது மகன் சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருக்கிறார். நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு வந்ததால் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.ஆனால் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.