நகர மினி பேருந்துகளில் 13 ரூபாய் வரை டிக்கெட் வசூல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட நகர மினி பேருந்துகளில் 13 ரூபாய் வரை முதியோர்கள் மற்றும் பெண்களிடம் டிக்கெட் வசூல்.

கோயம்பேடு மார்க்கெட் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் பூ விற்பனை பழ விற்பனை செய்யும் முதியோர்கள் இதனால் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள்.

வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி குப்பத்திலிருந்து கோயம்பேடு பகுதிக்கு மினி பேருந்தில் பயணித்த மூதாட்டி கன்னியம்மாள் என்பவரிடம் 13 ரூபாய் டிக்கெட் வசூல் செய்யப் பட்டதை மிகவும் வேதனையாக தெரிவித்தார்.ஒயிட்போர்டு பேருந்துகளில் மட்டும் இலவசமாக பெண்கள் முதியோர்கள் பயணிக்கும் நிலையில் மினி பேருந்துகளிலும் சலுகை வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.