Tn news : சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (ஆர்எம்சி) புதிய இயக்குநராகப் பதவி வகித்து வந்த புவியரசனுக்குப் பதிலாக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீரென கனமழை கொட்டியது. இதனால், மக்கள், வாகன ஓட்டிகள் அதிகளவு சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த திடீர் மழையை சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணிக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்று.
இதையும் படிங்க : Lata Mangeshkar’s Health : லதா மங்கேஸ்கர் உடல்நிலை !