மூத்த பத்திரிகையாளர் ஆர்.சி.சம்பத் மறைவு!

பிரபலமான வார இதழ்களில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சி. சம்பத் . இவர் பெங்களூரு சென்று திரும்பும் வழியில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.சி.சம்பத் உடல் நலகுறைவினால் மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது.

திரையுலகில் இயக்குநராக களம் கண்ட ஆர்.சி.சம்பத், குமுதம் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நெஞ்சார்ந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது