நாட்டுக்காக தேர்தலில் நிற்கிறேன் – சீமான்

சென்னை போரூரில் தேர்தல் பிரச்சாரதில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாம் தமிழர் வெற்றி என்பது வரலாற்றின் மாபெரும் புரட்சி என்றும் தான் ஓட்டுக்காக அல்ல, நாட்டுக்காக தேர்தலில் நிற்கிறேன் என்றும் கூறினார்.

ஆட்சி மாற்றம் என்பது அதிமுக கட்சிகளை மாறி, மாறி ஆட்சியில் அமர்த்துவது இல்லை. அப்படி செய்தால் ஆட்கள் மாறுவார்கள் ஆனால் நிர்வாகம் மாறாது. மழை நீரை வீட்டில் சேமிக்க சொல்லும் நீங்கள் நாட்டில் எவ்வளவு சேமிக்கிறீர்கள். ஆண்டுக்கு நான்கு ஆணிரம் டிஎம்சி மழை பெய்கிறது.

ஆனால், 4 ஆயிரம் டிஎம்சியில் வெறும் 1,500 டிஎம்சி நீர் மட்டும் சேமிக்கப்பட்டு, மீதமுள்ள அனைத்தும் தண்ணீரும் கடலில் விட்டு விடுகிறோம். 150 டிஎம்சி தண்ணீருக்கு கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கிறோம். இந்த நீரை சேமிக்க என்ன திட்டம் உள்ளது.” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய சீமான், “வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. 50 ஆண்டுகள் செய்யாத நல்லதை அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் எப்படி செய்வார்கள் என நம்புகிறீர்கள். கல்வி மானுட உரிமை அதை கொடுப்பது அரசின் கடமை. மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.