தமிழகத்தில் தமிழன் ஆட்சி மலரும்- சீமான்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் துரைமாணிக்கம், திருப்பத்தூரில் கோட்டைகுமார் ஆகியோரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில்,  “நாங்கள் வந்தபிறகு ஒரு மீனவரை கூட கொல்லவில்லை, என பாஜகவினர் கூறுகின்றனர். சமீபத்தில் கூட 4 மீனவர்களை இலங்கைகாரர்கள் கொன்றார்கள். அதை கண்டித்து பிரதமரோ, ஹெச்.ராஜாவோ ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. ஏன் காங்கிரஸ் தலைவர் கூட கண்டிக்கவில்லை. ஆனால் தற்போது நமது வீட்டு வாசலில் வாக்குக்காக நிற்கின்றனர்.

ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழித்தால்தான் மத்தியில் கூட்டாட்சி, தமிழகத்தில் தமிழன் ஆட்சி மலரும். நமது நாட்டில் 28 கோடி பேர் இரவில் உண்ண உணவில்லாதவர்களாக உள்ளனர். 

இதன்மூலம் அவர்கள் ஆண்ட லட்சனத்தை அறிந்து கொள்ளலாம். அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்ததால் வளரும் நாட்டு பட்டியலில் இருந்தே இந்தியாவை தூக்கவிட்டனர்.