Haryana Govt :4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை !

ஹரியானா மாநிலத்தில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, மாநில அரசு அறிவித்துள்ளது.

14 என்சிஆர் மாவட்டங்களில் உள்ள அனைத்து டீசல் ஜெனரேட்டர் செட்களையும் இயக்க அரசு முழு தடை விதித்தது.Haryana Govt Shuts Schools in 4 Districts

காற்றின் தரம் குறைந்து வருவதால், குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய இடங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படும் என்று ஹரியானா அரசு டிசம்பர் 2ஆம் தேதி வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதனைப்போல, அனைத்துவிதமான கட்டுமான பணிகளுக்கும் தற்காலிக தடையினை விதித்து உத்தரவிட்டுள்ளது.