பள்ளிகள் திறக்கப்படாது புதுவை அரசு அறிவிப்பு !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகம் மற்றும் புதுவையில் பாதிப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் ,மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

இந்நிலையில்,புதுவை அரசு நாளை முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , நாளை அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பள்ளி, கல்லூரிகளை திறப்பது சிறிதுகாலம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் பரவல் குறையாமல் இருப்பதால் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பதாக தெரிவித்தார்.மேலும் பள்ளிகள் திறக்கும் தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.