மாணவிகளுக்குப் பால் வழங்கும் திட்டம்

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு இன்று முதல் வழக்கம் போல் பள்ளிகள் முழு நேரமும் இயங்கத் தொடங்கின. மாணவ, மாணவிகளுக்குப் பால் வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார்.

இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் இன்று முதல் முழு நேரமும் செயல்படும் என்றும் வழக்கமான பள்ளி நேரப்படி 1 முதல் 12-ம் வகுப்புகள் வரை அனைத்தும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஓராண்டுக்கு பிறகு இன்று முதல் முழு நேர வகுப்புகள் தொடங்கின.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பால் வழங்கும் திட்டம் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தது. ஆளுநர் தமிழிசை இந்த திட்டம் செயல்படும் என தெரிவித்திருந்தார் அதன்படி நேற்று முதல் பால் விநியோகம் தொடங்கியது.