புதுவையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு !

கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.

தற்போது புதுவையில்,வரும் 16-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்படுவதாக, முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.முதல்கட்டமாக, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் மருத்துவக் கல்லூரியை திறக்க அரசு திட்டமிட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதல்வர் ரங்கசாமி ,புதுச்சேரியில் வரும் 16-ம் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல், அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.