Crime news : பேருந்திலிருந்து குதித்த மாணவி உயிரிழப்பு !

Women doctor suicide
திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை

Crime news : ஒசூரின் சினகிரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்க முயற்சித்த போது, பேருந்தின் பின்பக்க டயரில் சிக்கி உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த மாணவி கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.பள்ளி முடிந்து வீட்டிற்கு அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது, பேருந்து சினிகிரிப்பள்ளி நிறுத்தத்தில் நிற்காமல் பல மீட்டர்கள் தூரம் சென்றதாக சொல்லப்படுகிறது. பேருந்து தனது கிராமத்தில் நிற்காததால் மாணவி ஓடும் பேருந்திலிருந்து குதித்துள்ளார்.Crime news :

இதில் அந்த மாணவி படுகாயம் அடைந்துள்ளார். அவரை அதே பேருந்தில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு தூக்கிச்சென்றிருக்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.

பின்பு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.இந்நிலையில்,இறுதியாக சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : tn news : மீண்டும் தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் !