TN School Students: டிஇஓக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு

school-education-dept-orders-bus-footboard-and-two-wheeler-travel
பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு

TN School Students: மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதால் அண்மைக்காலங்களில் விபத்துகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி விபத்தில் சிக்கி பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் பொருட்டு பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதால் அண்மைகாலமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு பள்ளி வளாகங்களுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வருகை புரிந்தால் அவர்களை பள்ளிக்கு அனுமதிக்க வேண்டாம்.

இதேபோல, விதிகளை மீறி பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது மாணவர்களுக்கு வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் பள்ளி முடிந்தவுடன் மாணவர்களை கும்பலாக ஒரே நேரத்தில் வளாகத்தை விட்டு வெளியே அனுப்பாமல் 15 நிமிட இடைவேளையில் தனித்தனி குழுக்களாக மாணவர்களை அனுப்ப வேண்டும்.

மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு, குறைவாக பேருந்துகள் இயக்கப்படும் தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Scholarship: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – வெளியானது சூப்பர் அறிவிப்பு!