339 கிலோ சாக்லேட்டில் SPP சிலை

இந்த ஆண்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது சிலை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 339 கிலோ சாக்லெட் கொண்டு 5.8 அடி உயரத்தில் அவரது உருவ சிலை வடிவமைக்கப்பட்டது.

சுமார் 161 மணி நேரத்தில் இந்த சிலை தயாரிக்கப்பட்டுள்ள கூறப்படுகிறது. இந்த சாக்லேட் சிலை வரும் ஜனவரி 10-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என சூகா என்ற சாக்லெட் ஷாப் உரிமையாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரஜினிகாந்த், கார்ட்டூன் கதாப்பாத்திரம் மிக்கி மவுஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள மிஷன் வீதியில் உள்ள ‘சூகா’ என்ற சாக்லெட் ஷாப் அமைந்துள்ளது. இந்த சாக்கெட் ஷாப்பில் ஒவ்வொரு வருடமும், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, உலகம் முழுவதும் மக்களால் விரும்பப்படும் பிரபலங்களின் உருவங்கள் சிலையாக வடிவமைத்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.