கரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் சவுதி இளவரசர் !

கரோனா பரவலில் சவுதி அரேபியா உலகளவில் 35ஆவது இடத்தில் இருக்கிறது. இங்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.இந்நிலையில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கரோனா தடுப்புக்கான மருந்தின் முதல் டோஸை பெற்றுக்கொண்டார்.

கடந்த வாரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தடுப்பூசி பெற்றுக் கொண்டார். உலக அளவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆவார்.


அமெரிக்காவின் வருங்கால அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.