சசிகலாவுக்கு கொரோனா உறுதி

சசிகலாவுக்கு நுரையீரலில் தீவிரத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதியம் ஒன்றரை மணியளவில் சசிகலா சக்கர நாற்காலி மூலம் ஆம்புலன்ஸுல் ஏற்றப்பட்டு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது, சிடி ஸ்கேன் முடிவின் அடிப்படையில் அவருக்கு அடுத்த கட்ட சிகிச்சை குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது